/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்செந்துார் பாதயாத்திரை துவக்கம்
/
திருச்செந்துார் பாதயாத்திரை துவக்கம்
ADDED : ஏப் 28, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை நகரத்தார் 46வது ஆண்டாக தேவகோட்டையில் இருந்து திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
உள்ளூர் நகரத்தார் ஏழு காவடிகளும், வெளியூர் நகரத்தார் ஏழு காவடிகளும் என 14 காவடிகள் நகர்வலம் வந்தனர். சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் சுவாமி தரிசனம் செய்தபின் காவடிகளும் பக்தர்களும் திருச்செந்துாருக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். திருச்செந்தூர் சென்றதும் நகரத்தார் மடம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து காவடி, பால்குடம், சந்தனக்குடம் எடுத்து முருகனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

