sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவகங்கை பைபாஸ் சந்திப்பில் விளக்கு இல்லாததால் விபத்து

/

 சிவகங்கை பைபாஸ் சந்திப்பில் விளக்கு இல்லாததால் விபத்து

 சிவகங்கை பைபாஸ் சந்திப்பில் விளக்கு இல்லாததால் விபத்து

 சிவகங்கை பைபாஸ் சந்திப்பில் விளக்கு இல்லாததால் விபத்து


ADDED : நவ 14, 2025 04:22 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை புறவழிச்சாலை சந்திப்புகளில் இரவில் மின் விளக்குகள் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை நகருக்குள் போக்குவரத்தை குறைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணி 2 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக காஞ்சிரங்காலில் திருப்புத்துார் நெடுஞ்சாலையில் இருந்து கல்குளம் அருகே இளையான்குடி நெடுஞ்சாலை வரை 7.6 கி.மீ., துாரம் ரூ.77.16 கோடியில் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் 2023 ஆம் ஆண்டு நவ. தொடங்கி நடந்த வருகிறது. புறவழிச்சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் இளையான்குடி சாலையில் இருந்து தொண்டி சாலை வரை மட்டும் உள்ள புறவழிச் சாலையை வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தொண்டி சாலையில் வேலுநாச்சியார் மணி மண்டபம் அருகே உள்ள சந்திப்பில் இருந்து பனங்காடி ரோடு சந்திப்பு, வந்தவாசி ரோடு சந்திப்புகளில் மின் விளக்குகள் இல்லை.

இரவு நேரத்தில் நகரில் இருந்து அல்லுார் பனங்காடி, வந்தவாசி, ஆயுதப்படை குடியிருப்பு, போக்குவரத்து நகர் செல்லக்கூடிய மக்கள் தங்களின் வாகனங்களில் புறவழிச்சாலையை பயன்படுத்திதான் செல்கின்றனர். இரவு நேரத்தில் தொண்டி ரோடு சந்திப்பிலும், பனங்காடி ரோடு சந்திப்பிலும், வந்தவாசி ரோடு சந்திப்பிலும் போதிய மின்விளக்குகள் இல்லாததால் டூவீலரில் செல்வோர்கள் தொண்டி ரோட்டில் இருந்து புறவழிச்சாலையில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்களில் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

நேற்று முன்தினம் கூட கல்லுாரி மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். கடந்த வாரம் கூட ஒருவர் விபத்தில் சிக்கினார்.

அதேபோல் நகரில் இருந்து பணி முடித்து புறவழிச்சாலையை பயன்படுத்தி டூவீலரில் இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு செல்லும் பெண்கள் அச்சப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் புறவழிச்சாலை சந்திப்பு மற்றும் சாலைகளில் போதிய மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us