ADDED : ஜூன் 30, 2026 09:06 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: பாகனேரியில் மொழிப்போர் தியாகி திருஞானசம்பந்தன் நினைவு நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 7, நடுமாடு பிரிவில் 11, சிறிய மாடு பிரிவில் 24, கரிச்சான் வகை மாடு பிரிவில் 14 ஜோடிகள் வீதம் பங்கேற்றன. முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர், சாரதிக்கு பரிசு வழங்கப்பட்டன. விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
