/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை அருகே காலியான கிராமம் விழாவிற்காக கூடிய கிறிஸ்தவர்கள்
/
மானாமதுரை அருகே காலியான கிராமம் விழாவிற்காக கூடிய கிறிஸ்தவர்கள்
மானாமதுரை அருகே காலியான கிராமம் விழாவிற்காக கூடிய கிறிஸ்தவர்கள்
மானாமதுரை அருகே காலியான கிராமம் விழாவிற்காக கூடிய கிறிஸ்தவர்கள்
ADDED : டிச 07, 2025 09:11 AM

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குமிழன்தாவு கிராமத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் வெளியேறிய கிறிஸ்தவர்கள் ஆண்டுக்கு ஒரு நாள் நடக்கும் புனித சவேரியார் சர்ச் திருவிழாவிற்காக நேற்று ஊருக்கு வந்தனர்.
குமிழன் தாவு கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பத்தினர் வசித்து வந்தனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காததாலும், போதிய வேலை வாய்ப்பு இல்லாததாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஊரை காலி செய்து பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இக்கிராமத்தில் ஒருவர் கூட வசிக்கவில்லை. வீடுகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன.
ஆனால் ஆண்டுக்கு ஒரு நாள் நடக்கும் புனித சவேரியார் சர்ச் விழாவிற்கு மட்டும் வருவர். இந்தாண்டு டிச., முதல் சனிக்கிழமை நடந்த விழாவிற்காக கிறிஸ்தவர்கள் வந்தனர்.
இதையொட்டி சேதமடைந்த சர்ச் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது. பாதிரியார்கள் மரியலூயிஸ், சின்னதுரை, ஒனாசிஸ் ஆகியோர் திருப்பலி நடத்தினர். புனித சவேரியார் சொரூபம் தாங்கிய சப்பரத்தை கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கிராமத்தைச் சேர்ந்த சில்வெஸ்டர் குமார் 47, கூறியதாவது: மிக பசுமையாக இருந்த கிராமத்தில் காலப்போக்கில் போதிய மழை, வேலைவாய்ப்பு இல்லாததால் அனைத்து குடும்பத்தினரும் பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
இருப்பினும் சர்ச்சில் ஆண்டுக்கு ஒரு நாள் நடக்கும் விழாவிற்காக வந்து விடுவோம். விழாவிற்குள் சர்ச்சை சீரமைக்க வேண்டும் என முடிவெடுத்து தற்போது புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டோம். இந்தாண்டு சர்ச் விழாவில் பங்கேற்றது சந்தோஷமாக இருந்தது என்றார்.

