sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பாசன கால்வாயில் தேங்கிய கழிவுநீர் மழைநீர் வீணாவதால் விவசாயிகள் கவலை

/

 பாசன கால்வாயில் தேங்கிய கழிவுநீர் மழைநீர் வீணாவதால் விவசாயிகள் கவலை

 பாசன கால்வாயில் தேங்கிய கழிவுநீர் மழைநீர் வீணாவதால் விவசாயிகள் கவலை

 பாசன கால்வாயில் தேங்கிய கழிவுநீர் மழைநீர் வீணாவதால் விவசாயிகள் கவலை


ADDED : டிச 07, 2025 09:13 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாசன கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேங்கி மழைநீர் கண்மாய்க்கு செல்லாமல் வீணாகிறது.

அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாறு அணைக்கட்டில் இருந்து அரசினம்பட்டி வழியாக பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்ல வன்னிமகுந்தான் கால்வாய் உள்ளது.

குப்பை கொட்டப்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் இக்கால்வாய் இருந்த இடமே தெரியாமல் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து பெயரளவுக்கு சில மீட்டர் தூரம் மட்டும் கால்வாய் துார்வாரப்பட்டது.

அரசினம்பட்டி அருகே கால்வாய் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இதனால் கால்வாயில் கழிவு நீர், குப்பை தேங்கி சாக்கடையாக மாறியுள்ளது. மழை பெய்யும் போது தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு செல்ல முடியாமல் இடையிலேயே வீணாகி விடுகிறது.

மழை பெய்தும் தேங்கிய கழிவுநீர் கூட தங்கள் கண்மாய்களுக்கு வந்து சேரவில்லையே என ஆயக்கட்டுதாரர்கள் கவலையில் உள்ளனர். கால்வாயை முழுமையாக சீரமைத்து அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல மாவட்ட நிர்வாகம் வழி ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us