sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

 ஆசிரியர் கொலை ஒரே குடும்பத்தில் மூவருக்கு 'ஆயுள்'

/

 ஆசிரியர் கொலை ஒரே குடும்பத்தில் மூவருக்கு 'ஆயுள்'

 ஆசிரியர் கொலை ஒரே குடும்பத்தில் மூவருக்கு 'ஆயுள்'

 ஆசிரியர் கொலை ஒரே குடும்பத்தில் மூவருக்கு 'ஆயுள்'


ADDED : நவ 13, 2025 02:36 AM

Google News

ADDED : நவ 13, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசி அருகே புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் சந்தோஷ், 36. இவர், 2016ல் பாவூர்சத்திரம் -சுரண்டை சாலையில், மனைவி அனுஷாவுடன் வசித்தார். பக்கத்து வீட்டில் வசித்த பொன்செல்வி, 36, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

பொன்செல்வி கணவர் முருகன் அபுதாபியில் பணியாற்றியதால், பொன் செல்வி, சந்தோஷ் நெருக்கம் அதிகரித்தது. 2016 பிப்ரவரியில் முருகன் சொந்த ஊர் வருவதாக இருந்தது.

அப்போது சந்தோஷ் உடனான நெருக்கம் தெரிந்துவிடும் என்பதால், 2016 பிப்., 6ல் சந்தோஷை வீட்டிற்கு அழைத்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். பின்னர், தன் தம்பி முருகன், 34, தந்தை தங்கபாண்டி, 70, ஆகியோர் உதவியுடன் அவரது உடலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்தார்.

மூ வரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us