sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

 பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் பலி

/

 பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் பலி

 பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் பலி

 பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் பலி


ADDED : டிச 01, 2025 01:06 AM

Google News

ADDED : டிச 01, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பைக்கில் சென்ற தம்பதி உள்ளிட்ட மூவர் லாரி மோதியதில் பரிதாபமாக பலியாயினர்.

சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள் செல்வபிரபு 50. மெட்டல் பாலீஷ் கடை நடத்தி வந்தார்.

அவரது மனைவி உஷா 40, மெடிக்கல் கடை நடத்தி வந்தார். சுரண்டை நகராட்சியில் காங்., கவுன்சிலராக இருந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சுரண்டை - சங்கரன் கோவில் ரோடு ரெட்டைகுளம் பகுதியில் இவர்களுக்கு தோட்டம் உள்ளது. அதில் தற்போது பூஞ்செடிகள் பயிரிடப் பட்டுள்ளன.

நேற்று அதிகாலை அருள் செல்வபிரபு, உஷா மற்றும் மனைவியின் தங்கை பிளஸ்சி 35, ஆகியோர் பைக்கில் தோட்டத்திற்குச் சென்றனர். பூப்பறித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.

ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரியின் முன்பகுதி டூவீலர் மீது மோதியது.

இதனால் டூவீலர் தடுமாறி கவிழ்ந்தது. லாரியின் பின்புற டயர் மூவரின் மீதும் ஏறி இறங்கியது. அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி சம்பவயிடத்திலேயே பலியாயினர்.

சுரண்டை போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவர் குலையநேரியைச் சேர்ந்த குமார் 30, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட மூவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us