sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

 தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை  அச்சுறுத்தும் காரைக்கால் மீனவர்களை கண்டித்து போராட்டம்

/

 தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை  அச்சுறுத்தும் காரைக்கால் மீனவர்களை கண்டித்து போராட்டம்

 தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை  அச்சுறுத்தும் காரைக்கால் மீனவர்களை கண்டித்து போராட்டம்

 தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை  அச்சுறுத்தும் காரைக்கால் மீனவர்களை கண்டித்து போராட்டம்


ADDED : டிச 07, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 07, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 200 விசைப்படகுகள், 4,000 நாட்டுப்படகுகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 500 விசைப்படகுகள், 2,000 நாட்டுப்படகுகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 விசைப்படகுகள், 2,000 நாட்டுப்படகுகள் உள்ளன.

இதில் விசைப்படகு மீனவர்கள் சனி, திங்கள், புதன்கிழமைகளிலும், நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என மூன்று நாட்களிலும் கடலில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வாரம் முழுதும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடல் பகுதிகளில், அதிக அளவு இன்ஜின் திறன் கொண்ட விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர்.

மேலும், அவர்கள் இலங்கை கடல்பகுதி வரை செல்வதால், அப்பகுதி மீனவர்களும் பெரியளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், காரைக்கால் மீனவர்கள், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்தியும், தாக்கியும் அச்சுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து மூன்று மாவட்ட மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வரும் டிச., 19ம் தேதி கிழக்குக் கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

900 குதிரைத்திறன் இது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை சங்க பொதுச்செயலர் தாஜுதீன் கூறியதாவது:

தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் படகின் இன்ஜின், 150 குதிரைத்திறன் உடையது தான். ஆனால், காரைக்கால் மீனவர்கள் பயன்படுத்தும் படகில், 400 முதல் 900 குதிரைத்திறன் கொண்ட இன்ஜின்கள் உள்ளன.

அவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபடுகின்றனர். காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்பகுதி வரை செல்வதால், தமிழக மீனவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

சமீபத்தில் ஆந்திரா கடற்பகுதியில் காரைக்கால் மீனவர்கள் சென்றதால், படகுகளை அந்த அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மீனவர்களின் வலை, படகுகளைச் சேதப்படுத்தியது தொடர்பாக ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு கேட்டுள்ளனர்.

ஆ னால், நம் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. காரைக்கால் மீனவர்கள் கடல் வளத்தை அழிப்பது மட்டுமில்லாமல், மீனவர்களைத் தாக்கியும், படகு மற்றும் வலைகளைச் சேதப்படுத்தியும் அச்சுறுத்தி வருகின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழக அரசு, மீனவர்கள் பிரச்னை தொடர்பாகப் பேசி நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us