sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஜமாபந்தியில் 3 நாட்களில் 1766 மனுக்கள் வழங்கல்

/

ஜமாபந்தியில் 3 நாட்களில் 1766 மனுக்கள் வழங்கல்

ஜமாபந்தியில் 3 நாட்களில் 1766 மனுக்கள் வழங்கல்

ஜமாபந்தியில் 3 நாட்களில் 1766 மனுக்கள் வழங்கல்


ADDED : மே 28, 2025 07:27 AM

Google News

ADDED : மே 28, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் நடந்து வரும் ஜமாபந்தியில் இதுவரை 1766 மனுக்களை பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.மாவட்டத்தில் மே 22 முதல் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடந்து வருகிறது.

பெரியகுளத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், உத்தமபாளையத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, ஆண்டிபட்டியில் பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், தேனியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி, போடியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது தலைமை வகிக்கின்றனர்.

மூன்று நாட்கள் நடந்துள்ள ஜமாபந்தியில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, மின் இணைப்பு,புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1766 மனுக்களை பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.

இதில் பெரியகுளத்தில் 50,தேனியில் 20, உத்தமபாளையத்தில் 10, போடியில் 15 பட்டாமாறுதல், உட்பிரிவு உள்ள மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெரியகுளத்தில் 20 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ன.






      Dinamalar
      Follow us