sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

/

 வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

 வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை

 வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை


ADDED : டிச 02, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக நேற்று பாலாலய பூஜை விமர்சையாக நடந்தது. விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளன.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு 10 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த அறநிலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நேற்று கோபுர கலசங்களுக்கு பாலாலய பூஜை நடந்தது.

வீரபாண்டி கவுமாரியம்மன், கண்ணீஸ்வர முடையார், முருகன், விநாயகர், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட 8 கோபுர கலசங்களின் மூலமாக கும்பங்கள், பலகையில் வரையப்பட்ட கோபுர விமானங்களின் படங்கள் வைக்கப்பட்டு பூஜை, யாகங்கள் நடத்தப்பட்டன. விழாவிற்கு ஹிந்துசமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் ஜெயதேவி தலைமை வகித்தார்.

கோயில் செயல் அலுவலர் நாராயணி முன்னிலை வகித்தார். துறை ஆய்வாளர் கார்த்திகேயன், ஊர் முக்கியஸ்தர்கள், விழா உபயதாரர்கள் உள்ளிட்டோர் பூஜை, யாகத்தில் பங்கேற்றனர்.

கோயில் மேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கணக்காளர் பழனியப்பன், அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உபயதாரர்களுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் கும்பாபிஷே கத்திற்கான பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us