/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.30 லட்சம் மோசடி; அரசு பஸ் மெக்கானிக் மீது வழக்கு
/
அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.30 லட்சம் மோசடி; அரசு பஸ் மெக்கானிக் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.30 லட்சம் மோசடி; அரசு பஸ் மெக்கானிக் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.30 லட்சம் மோசடி; அரசு பஸ் மெக்கானிக் மீது வழக்கு
ADDED : டிச 03, 2025 12:41 AM

தேனி: தேனியில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பிட்டர் பயிற்சி பெற்ற பானுமதி 30, அவரது கணவர் ராஜேஷ் 37,யிடம் ரூ.6.30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை மெக்கானிக் பழனிவேல் 59, மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தேனி அரண்மனைப்புதுார் ஊராட்சி கோட்டைப்பட்டி தெற்குத் தெரு ராஜேஷ், இவரது மனைவி பானுமதி. இவர் அரசு ஐ.டி.ஐ.,யில் பிட்டர் படித்து அப்ரண்டிஸ் ஆக பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்துக்கழக டெப்போவில் 2019ல் பயிற்சி பெற்றார்.
கணவர் ராஜேஷின் உறவினர் மூலம் டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றிய தேனி பங்களாமேடு, சோலை மலை அய்யனார் கோயில் தெரு பழனிவேலுடன் அறிமுகம் கிடைத்தது. அவர் பானுமதி, அவரது கணவரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6.30 லட்சம் பெற்று, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றினார். பணத்தை கேட்ட கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ராஜேஷ் புகாரில், பழனிவேல் மீது தேனி போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

