/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காதலி தற்கொலைக்கு காரணமான கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
/
காதலி தற்கொலைக்கு காரணமான கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
காதலி தற்கொலைக்கு காரணமான கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
காதலி தற்கொலைக்கு காரணமான கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
ADDED : ஆக 05, 2025 06:51 AM

தேனி : காதலி தற்கொலைக்கு காரணமான அப்பெண்ணின் கணவர் தங்கரமேஷ் 43,யை கட்டையால் தாக்கி கொலை செய்த காமயக்கவுண்டன்பட்டி அசன்குமாருக்கு 32,க்கு ஆயுள் தண்டனை விதித்துதேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கம்பம் காமயக்கவுண்டன்பட்டி தங்கரமேஷ் 43. அதே பகுதி கூத்தனாட்சி கோயில் தெரு அசன்குமார் 32. இருவரும் இணைந்து விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தனர்.
இந்த பழக்கத்தில் அசன்குமார், தங்கரமேஷின் வீட்டிற்கு வந்து சென்றார். இதில் தங்கரமேஷின் மனைவி அருள்மொழி, அசன்குமார் முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஒன்றாக படித்ததால்பால்ய கால நட்பு முறையற்ற பழக்கமாக மாறியது.
இந்த விபரங்கள் கணவருக்கும், உறவினர்களுக்கும் தெரிந்தது. இதனால் தங்கரமேஷின் மனைவி அருள்மொழி 2021 ஜனவரி 25ல் துாக் கிட்டு இறந்தார். அதுமுதல் தங்கரமேஷூக்கும், அசன்குமாருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
2022 பிப்.23ல் கம்பத்தில் டூவீலரில் சென்றதங்கரமேஷை, டிராக்டரில் வந்த அசன்குமார் வழிமறித்து உருட்டைக்கட்டையால் தாக்கினார். தேனி மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சையில் இருந்த தங்கரமேஷ் இறந்தார்.
புகாரில் அசன்குமாரை கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இந்தவழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து அசன்குமாருக்கு ஆயுள் தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.

