sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டுமனை வழங்க கோரி ரோடு மறியல்

/

வீட்டுமனை வழங்க கோரி ரோடு மறியல்

வீட்டுமனை வழங்க கோரி ரோடு மறியல்

வீட்டுமனை வழங்க கோரி ரோடு மறியல்


ADDED : மார் 15, 2024 06:38 AM

Google News

ADDED : மார் 15, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-பெரியகுளம் : பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் மக்கள் வீட்டு மனை வழங்க கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இதன் மேற்பகுதி போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பாறை, குறவன்குழி மலை கிராமங்கள் உள்ளன. இரு கிராமத்தில் 37 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு அரசு வழங்கும் எந்த சலுகையும் சென்றடைவதில்லை. குழந்தைகள் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.

இதனால் பழங்குடியினர் குழந்தைகளின் படிப்பிற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு சோத்துப்பாறை பகுதியில் குடிசை அமைத்து வசிக்கின்றனர். குழந்தைகள் சோத்துப்பாறை பள்ளியில் படித்து வருகின்றனர். 2005 முதல் அரசு இலவச வீட்டு மனைகள் ஒதுக்கி தரக்கோரி வருவாய்த் துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். நடவடிக்கை இல்லாததால் நேற்று சோத்துப்பாறை அணை பகுதி வனத்துறை சோதனை சாவடி முன்பாக பழங்குடியினர் அரை மணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அகமலை, கண்ணக்கரை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தென்கரை எஸ்.ஐ., கர்ணன் பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us