sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 இடுக்கியில் பதட்டமான 83 ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

/

 இடுக்கியில் பதட்டமான 83 ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

 இடுக்கியில் பதட்டமான 83 ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

 இடுக்கியில் பதட்டமான 83 ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு


ADDED : டிச 09, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நிலையில், 83 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக இடுக்கி உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று (டிச.9) நடக்கிறது.

இடுக்கி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்படி ஆண்கள் 4, 43,521, பெண்கள் 4,68,602 , பிற பாலினத்தவர் 10, வெளி நாடுகளில் வசிப்பவர் 10 என 9,12,133 வாக்காளர்கள் உள்ளனர். 1192 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 83 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

52 ஊராட்சிகள், 8 ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி, இரண்டு நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 1036 வார்டுகளில் 3100 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டு பதிவுக்கு 2194 கன்ரோல் யூனிட், 6467 பாலட் யூனிட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. காத்திருப்பு பட்டியல் உள்பட 4768 அதிகாரிகள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டு பதிவு நடைபெறும்.

பாதுகாப்பு: மாவட்டத்தில் 17 டி.எஸ்.பி., 51 இன்ஸ்பெக்டர்கள், 238 எஸ்.ஐ.க்கள், 1842 போலீசார், ஊர் காவலர் படையைச் சேர்ந்த 177 பேர், சிறப்பு பிரிவு போலீசார், கலால், வனம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தினேசன்செருவாட் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us