sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி வழக்கு தொடர்ந்த கவுன்சிலரும் ஆப்சென்ட்

/

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி வழக்கு தொடர்ந்த கவுன்சிலரும் ஆப்சென்ட்

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி வழக்கு தொடர்ந்த கவுன்சிலரும் ஆப்சென்ட்

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி வழக்கு தொடர்ந்த கவுன்சிலரும் ஆப்சென்ட்


ADDED : மே 29, 2025 03:12 AM

Google News

ADDED : மே 29, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி:கெங்குவார்பட்டி பேரூராட்சி தி.மு.க., தலைவர் தமிழ் செல்விக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்தை கவுன்சிலர் பொன்மணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

பேரூராட்சி கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று கவுன்சிலர்கள் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது.

2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க., 10, அ.தி.மு.க., 3, ம.தி.மு.க.,1, சுயே.,1 வெற்றி பெற்றனர். இதில் 6 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தமிழ் செல்வி தலைவராகவும், 10 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஞானமணி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் ஆரம்பத்தில் சுமூக உறவு இருந்தது. பின் பணிகளுக்கு டெண்டர் விடுவது, கான்ட்ராக்டர் தேர்வில் அவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு சாதகமாக இருந்தனர்.

இதனால் தலைவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரக்கோரி ஜனவரியில் முந்தைய கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.

இருதரப்பையும் அழைத்து பேரூராட்சி அலுவலகத்தில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.

இந்நிலையில் 7 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பொன்மணி, தலைவர் தமிழ்செல்வி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

பேரூராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் நேற்று தேர்தல்அதிகாரி (செயல் அலுவலர்) இளங்கோவன், கூட்டத்தில் ஆதரவு, எதிர்ப்புகளை பதிவு செய்ய தயாரானார்.

கூட்டத்திற்கு தலைவர் தமிழ்செல்வி வந்தார். ஆனால் காலை 11:௦௦ மணி முதல் 12:30 வரை கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என இளங்கோவன் அறிவித்தார்.-






      Dinamalar
      Follow us