sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது

/

டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது

டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது

டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி ரகளை செய்த எட்டுபேர் கைது


ADDED : மார் 21, 2024 09:16 AM

Google News

ADDED : மார் 21, 2024 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில், ராமநாதபுரம் மாவட்டம், பாகூர் பகுதியை சேர்ந்த பிரேம்நாத், 21, என்பவர் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 18 ம் தேதி இரவு, அவர் பணியில் இருந்தபோது, போதையில் வந்த கும்பல் பாரில் ரகளையில் ஈடுபட்டது. பிரேம்நாத்திடம் மதுபானம் கேட்டு தகராறு செய்தது. தரமறுத்ததால், பீர்பாட்டிலால் பிரம்நாத்தின் தலையில் தாக்கியும், அரிவாளால் கை, கால்களில் வெட்டிவிட்டும் தப்பியது.

காயம் அடைந்த பிரேம்நாத், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாரில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி அரிவாளால் வெட்டும் காட்சிகளும், அதில் ஈடுபட்டவர்களின் விபரமும் தெரிந்தது.

அதையடுத்து நேற்று முன்தினம், மீஞ்சூர் அடுத்த மேலுார் பகுதியை சேர்ந்த பிரசாந்த், 19, மீஞ்சூர் மேட்டுக்காலனி ஹரிஷ், 19, கொண்டக்கரை ஹரிபிரசாத், 19, பாரதிராஜன், 28, மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் சிவனேசன், 19, கவுண்டர்பாளையம் லோகேஷ், 21, உதயகுமார், 21, வெள்ளம்பாக்கம் கார்த்திக், 21 ஆகிய எட்டுபேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us