ADDED : செப் 12, 2024 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,:சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 42. பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த சகநோயாளிகள் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அதிகாலையில் செந்தில் இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.