/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளர்களை குறிவைத்து அரசு நடத்தும் 3 மதுக்கடைகள்
/
தொழிலாளர்களை குறிவைத்து அரசு நடத்தும் 3 மதுக்கடைகள்
தொழிலாளர்களை குறிவைத்து அரசு நடத்தும் 3 மதுக்கடைகள்
தொழிலாளர்களை குறிவைத்து அரசு நடத்தும் 3 மதுக்கடைகள்
ADDED : நவ 14, 2025 10:31 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக சாலையோரம், தொழிலாளர்களை குறி வைத்து நடத்தப்படும் மூன்று டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளும், 24 மணி நேரமும் இயங்குவதால், இரவு - பகல் என பாராமல் எப்போதும் தொழிலாளர்கள் நடமாட்டம் இருக்கும்.
தொழிற்சாலை வளாகத்தில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலைகளில், தனியாருக்கு சொந்தமான இடங்களில், மூன்று டாஸ்மாக் கடைகள் (எண்: 9105, 9191, 9138) இயங்கி வருகின்றன.
தொழிலாளர்களை மட்டுமே குறி வைத்து, இந்த டாஸ்மாக் கடைகள் இயங்குவதால், எப்போதும் அந்த கடைகளில் திருவிழா கூட்டம் போல், தொழிலாளர்கள் நிரம்பி வழிவதை காண முடியும்.
தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளில் இழப்பது ஒருபுறம் இருக்க, பல தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லும் ஆபத்தான நிலை தொடர்கிறது.
இதனால், விபத்தில் சிக்கும் தொழிலாளர்கள், உற்பத்தி பாதிப்பு போன்ற இக்கட்டான சூழல்நிலைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தள்ளப்படுகின்றனர்.
தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என, பல ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, உடனே மூன்று டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

