sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 'டிட்வா' புயலால் தொடர் மழை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'

/

 'டிட்வா' புயலால் தொடர் மழை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'

 'டிட்வா' புயலால் தொடர் மழை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'

 'டிட்வா' புயலால் தொடர் மழை கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'


ADDED : டிச 02, 2025 04:46 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: 'டிட்வா' புயல் காரணமாக, நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் குளமாக தேங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 'டிட்வா' புயல் காரணமாக நேற்று, வானிலை மையத்தின் சார்பில், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டது. காலையில் மழையில்லாததால், பள்ளிக்கு சென்ற மாணவ - மாணவியர், மாலையில் கொட்டும் மழையில் நனைந்து வீட்டிற்கு திரும்பினர்.

முன்கூட்டியே மழையை கணிக்காமல் விடுமுறை அளிக்காததால், மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, மழை காரணமாக குறைந்தளவு மக்களே மனு அளிக்க வந்ததால், கலெக்டர் அலுவலகம் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

நேற்று, நிலம் சம்பந்தமாக 53, சமூக பாதுகாப்பு திட்டம் 39, வேலைவாய்ப்பு வேண்டி 35, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 32, இதர துறை 36 என, மொத்தம் 195 மனுக்கள் பெறப்பட்டன.

தாட்கோ சார்பில், 9 பேருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 45 லட்சம் ரூபாய் மானியத்தில், 97.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நில ஆவணத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us