sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கடலீஸ்வரர், சக்தி கணபதி கோவில்களில் கும்பாபிஷேகம்

/

 கடலீஸ்வரர், சக்தி கணபதி கோவில்களில் கும்பாபிஷேகம்

 கடலீஸ்வரர், சக்தி கணபதி கோவில்களில் கும்பாபிஷேகம்

 கடலீஸ்வரர், சக்தி கணபதி கோவில்களில் கும்பாபிஷேகம்


ADDED : டிச 02, 2025 04:41 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி.: திருத்தணி ஒன்றியம் தாடூர் கிராமத்தில் உள்ள யோகீஸ்வரி சமேத கடலீஸ்வரர் சுவாமி கோவிலின் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா கடந்த மாதம், 27ம் தேதி துவங்கியது.

கடந்த 29ம் தேதி காலை முதல் யாகசாலை பூஜையும், மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை யாகசால பூஜைகள் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 6:00 மணிக்கு கொடிமரத்திற்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

காலை 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, யோகீஸ்வரி, கடலீஸ்வரர், பைரவர் ஆகிய சன்னிதிகளில் உள்ள கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு, யோகீஸ்வரி - கடலீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், பின் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதேபோல், திருத்தணி நகராட்சி சேகர்வர்மா நகரில் புதிதாக கட்டப்பட்ட சக்தி கணபதி கோவிலிலும், நேற்று காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us