sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஒரே மாதத்தில் முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை சேதம்

/

 ஒரே மாதத்தில் முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை சேதம்

 ஒரே மாதத்தில் முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை சேதம்

 ஒரே மாதத்தில் முருக்கம்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை சேதம்


ADDED : டிச 07, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 07, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: முருக்கம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை சீரமைத்து, ஒரே மாதத்தில் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு ஊராட்சியில், கீழ் முருக்கம்பட்டு, மேல்முருக்கம்பட்டு, மோட்டூர், சிங்கராஜபுரம் கிராமங்கள் உள்ளன.

முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேல்முருக்கம்பட்டு, சிங்கராஜபுரம், மோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு தானியங்கி ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும்.

இந்த கேட் வழியாக செல்லும் போது, விபத்துக்கள் அதிகளவில் நடந்து வந்தால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் ரயில்வே நிர்வாகம், மக்கள், வாகனங்கள் செல்வதற்கு வசதியாக தானியங்கி கேட்டை அப்புறப்படுத்தி, அதே பகுதியில் சுரங்கப்பாதை ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து வாகனங்கள் மற்றும் மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சுரங்கப்பாதையில் கான்கிரீட் சாலை சேதம் அடைந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக கான்கிரீட் சாலையை சீரமைத்தது.

ஆனால் முறையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் ஒரே மாதத்தில் மீண்டும், சுரங்கப் பாதை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதில் மழைநீர் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் சுரங்கப்பாதையில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சுரங்கப்பாதையை தரமாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us