/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி
/
தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி
தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி
தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டி பைனலில் தமிழகம் அதிர்ச்சி தோல்வி
ADDED : டிச 02, 2025 04:42 AM

சென்னை: தேசிய சப்- - ஜூனியர் கபடி இறுதிப்போட்டியில், தமிழக பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஹரியானா மாநிலம் அமெச்சூர் கபடி சங்கம் சார்பில், 39-வது தேசிய சப் - -ஜூனியர் மகளிர் கபடி போட்டி, அம்மாநிலத்தில் உள்ள கோஹானாவில் நடந்தது. இதில் 30 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரில் துவக்கம் முதலே, அசத்தலான ஆட்டத்தை வெளிப் படுத்திய தமிழக மகளிர் அணி, அரையிறுதியில் ராஜஸ்தான் அணியை 38 - -36 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் தமிழக அணி, வலிமை வாய்ந்த ஹரியானா அணியை எதிர்த்து மோதியது.
விறுவிறுப்பான ஆட்டத்தில், தமிழக அணி 42 - -32 என்ற புள்ளிக்கணக்கில், அதிர்ச்சி தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தை பிடித்தது.

