sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பராமரிப்பில்லாத கழிப்பறை செடிகள் வளர்ந்து படுமோசம்

/

 பராமரிப்பில்லாத கழிப்பறை செடிகள் வளர்ந்து படுமோசம்

 பராமரிப்பில்லாத கழிப்பறை செடிகள் வளர்ந்து படுமோசம்

 பராமரிப்பில்லாத கழிப்பறை செடிகள் வளர்ந்து படுமோசம்


ADDED : டிச 02, 2025 04:24 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: விஷ்ணுவாக்கம் கிராமத்தில் பராமரிப்பில்லாத சமுதாய கழிப்பறையில் செடிகள் வளர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

திருவள்ளூர் - செங்குன்றம் சாலையோரம் விஷ்ணுவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் வசதிக்காக, 2020 - 21ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை சார்பில், 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது.

சிறிது காலம் பயன்பாட்டில் இருந்த கழிப்பறை, அதன்பின் பராமரிப்பின்றி உள்ளது. கழிப்பறையைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டுள்ள சாய்தள பாதையை பயன்படுத்த முடியாத அளவிற்கு செடிகள் வளர்ந்துள்ளன.

இதனால், கழிப்பறையை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அரசு நிதி விரயமாகி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், பராமரிப்பில்லாத சமுதாய கழிப்பறையைச் சுற்றிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us