/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் எரிவாயு தகன மேடை அமையுமா?
/
கும்மிடியில் எரிவாயு தகன மேடை அமையுமா?
ADDED : டிச 07, 2025 06:19 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் எரிவாயு தகன மேடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் பொதுவாக கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம் பாப்பான்குளம் சுடுகாடு உள்ளது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள அந்த சுடுகாட்டில், எரிவாயு தகன மேடை அமைக்க, 2022ம் ஆண்டு, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நீர் நிலை பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ள முடியாத காரணத்தால் திட்டம் கைவிடப்பட்டது. வருமானம் குறைவாக உள்ள குடும்பத்தினர், ஈமச்சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாமல், தவித்து வருகின்றனர்.
விறகுகள், வரட்டி சாணம், பெட்ரோல், வெட்டியான் கூலி என, பல ஆயிரங்கள் செலவிட நேர்வதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த முறையில் எரிப்பதால் நகரின் சுற்றுச்சூழும் பாதிப்பதாகவும் கூறுகின்றனர்.
குறைந்தது, 25 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுவதால், எளிய மக்களால் இறுதி சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாத நிலை, கும்மிடிப்பூண்டியில் தொடர்கிறது. உடனடியாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், எரிவாயு தகன மேடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

