sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் மோதி குழந்தை பலி 2 பேருக்கு சிகிச்சை

/

பஸ் மோதி குழந்தை பலி 2 பேருக்கு சிகிச்சை

பஸ் மோதி குழந்தை பலி 2 பேருக்கு சிகிச்சை

பஸ் மோதி குழந்தை பலி 2 பேருக்கு சிகிச்சை


ADDED : மார் 21, 2024 11:27 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம் அடுத்த, கே.என்.புரம், லட்சுமி மில்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ஹரிஹரசுதன், 3, மகள் லபஷாஜோதி, 7.

நேற்று முன்தினம் இரவு, இருவரும், பாட்டி கனகாம்பாள், 60 உடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கோவை - மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி மூவரும் விபத்துக்குள்ளாகினர்.

படுகாயமடைந்த மூவரும், பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குழந்தை ஹரிஹரசுதன் உயிரிழந்தார். கனகாம்பாள் மற்றும் லபஷாஜோதி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அலட்சியமும் கவனக்குறைவும்!


தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகளை தவிர்க்கும் நோக்கில், தேவையான இடங்களில் மட்டுமே இடைவெளி விட்டு, மையத்தடுப்பு கற்கள் வைக்கப்படுகின்றன. கே.என்.புரம் பகுதியில் மைய தடுப்புக்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளில், பல இடங்களில் இடைவெளி உள்ளன.

இதனால், பொதுமக்கள் பல்வேறு இடங்களிலும் ரோட்டை கடக்கின்றனர். இவ்வாறு, கவனக்குறைவுடன் ரோட்டை கடக்க முயன்ற போது மூவரும் விபத்துக்குள்ளாகினர். எனவே, இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, பல ஆண்டுக்கு முன் வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளை அகற்றிவிட்டு, தேவையான இடத்தில் மட்டும் இடைவெளியுடன் மைய தடுப்பு கற்களை வைக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us