/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் 'அட்வைஸ்'
/
புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் 'அட்வைஸ்'
ADDED : மார் 21, 2024 11:24 AM

திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார், நேற்றுமுன்தினம் முதல் திருப்பூரில் முகாமிட்டுள்ளார்.
நேற்று அவர், கலெக்டர் அலுவலக இரண்டாவது தளம் அறை எண்: 225- ல் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
'சி-விஜில்' செயலியில் பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள், தேர்தல் புகார்கள் மீது பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; எவ்வித விதிமீறல்களும் நடைபெற்றுவிடக்கூடாது என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.

