/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : பிப் 27, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை, போடிபட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. காங்கயம் வட்ட வழங்கல் அலுவலர் ஜலஜா, பி.டி.ஓ., சிவகுருநாதன், உதவி திட்ட அலுவலர்கள் கவுதமன், விஜயசாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை தீயணைப்பு அலுவலர் லட்சுமணன், தீ தடுப்பு வழிமுறைகள், பாதிப்பிலிருந்து பாதுகாப்பது, முதலுதவி குறித்து பேசினார். உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன ரங்கம், 'கலப்பட பொருட்களை கண்டறிதல்' குறித்து விளக்கினார்.

