sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நடு ரோட்டில் பாயும் சாக்கடை கழிவு

/

நடு ரோட்டில் பாயும் சாக்கடை கழிவு

நடு ரோட்டில் பாயும் சாக்கடை கழிவு

நடு ரோட்டில் பாயும் சாக்கடை கழிவு


ADDED : ஜூலை 25, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் - பல்லடம் ரோடு நகரின் முக்கியமான ரோட்டில் ஒன்றாக உள்ளது. தினமும் பல்லாயிரம் வாகனங்கள் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.

இது, அதிகளவு வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த ரோட்டில் நொச்சிப்பாளையம் பிரிவு மூன்று ரோடுகள் சந்திக்கும் இடமாக, பரபரப்பான பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 3 வது குடிநீர் திட்ட மேல்நிலைத் தொட்டியும் அமைந்துள்ளது.

நான்கு புறமும் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. அதேபோல் வீரபாண்டி பிரிவு பகுதி முக்கியமான நான்கு ரோடுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இப்பகுதிகளில், ரோட்டோரம் அமைந்துள்ள வடிகால்களில் பெருமளவு மண்ணும், மக்காத கழிவுகளும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், வடிகாலில் செல்லவேண்டிய கழிவு நீர், தடைப்பட்டு, ரோட்டில் சென்று பாய்கிறது.

சில நேரங்களில் இது ரோட்டின் மையப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பாதசாரிகள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் வாரியிறைக்கப்பட்டு அவதி ஏற்படுகிறது. எனவே, வடிகால் உரிய முறையில் துார்வாரி சுத்தம் செய்து, கழிவு நீர் தேங்காமல் கடந்து செல்லும் வகையில, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us