/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட நபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
/
ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட நபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட நபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட நபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
ADDED : நவ 15, 2025 01:20 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, தேவனுார்புதுாரை சேர்ந்தவர் முரளிதரன். இவர், 2024 டிச., 7ம் தேதி, அதே பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் ஸ்ரீ அண்ணா பவன் ஓட்டலில், கொத்து கறி பரோட்டா,கிரில் சிக்கன் ஆகியவற்றுக்கு 500 ரூபாய் செலுத்தியதாகவும், அதை உரிய நேரத்தில் வழங்காமலும், தன்னை அவமரியாதையாக நடத்தியதாகவும் அதற்கு இழப்பீடாக, 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
விசாரணையில், முரளிதரன் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை. விசாரணைக்கும் ஆஜராகவில்லை. அவரது புகார் போலி என, உறுதியானது.
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தீபா, உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர், போலி புகார் எழுப்பி நுகர்வோர் கோர்ட் நேரத்தை வீணடித்ததற்காக, குறைதீர் ஆணையத்தின் சட்ட உதவி மையத்துக்கு, 50,000 ரூபாய், கடை உரிமையாளருக்கு 50,000 ரூபாய் என, 1 லட்சம் ரூபாயை, ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என, முரளிதரனுக்கு உத்தரவிட்டனர்.

