sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அறிவை விதைத்த தினமலர் 'பட்டம்' இதழ்; பதில் சொல்லி அசத்திய மாணவர்கள்

/

 அறிவை விதைத்த தினமலர் 'பட்டம்' இதழ்; பதில் சொல்லி அசத்திய மாணவர்கள்

 அறிவை விதைத்த தினமலர் 'பட்டம்' இதழ்; பதில் சொல்லி அசத்திய மாணவர்கள்

 அறிவை விதைத்த தினமலர் 'பட்டம்' இதழ்; பதில் சொல்லி அசத்திய மாணவர்கள்


UPDATED : டிச 02, 2025 07:28 AM

ADDED : டிச 02, 2025 07:00 AM

Google News

UPDATED : டிச 02, 2025 07:28 AM ADDED : டிச 02, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத் தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவர்களுக்காக வினாடி - வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். இவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதி போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சிறப்பு பரிசு வழங்கப்படும்.

திருப்பூர், அங்கேரிபாளையம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தகுதிச்சுற்றில், 220 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், 'பி' அணியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் வின்சன்பவுல் பிரபாகரன், 'ஏ' அணியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி திவ்யாஸ்ரீ ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளிச் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா போட்டியில் சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us