sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஐகோர்ட் உத்தரவை அவமதிப்பதா? துாய்மைப்பணியாளர்கள் ஆவேசம்

/

 ஐகோர்ட் உத்தரவை அவமதிப்பதா? துாய்மைப்பணியாளர்கள் ஆவேசம்

 ஐகோர்ட் உத்தரவை அவமதிப்பதா? துாய்மைப்பணியாளர்கள் ஆவேசம்

 ஐகோர்ட் உத்தரவை அவமதிப்பதா? துாய்மைப்பணியாளர்கள் ஆவேசம்


ADDED : டிச 09, 2025 07:53 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு, ஐகோர்ட் உத்தரவுப்படி குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டம், மறியலில், 900 பேர் கைதாகினர்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடந்தது. இதில், 'மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் துாய்மைப்பணி தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சியில் பணிபுரியும் 'அவுட்சோர்ஸிங்' துாய்மைப் பணியா ளர், ஓட்டுனர், குடிநீர் பணியாளர் மற்றும் டி.பி.சி. ஊழியர்களுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பி.எப். இ.எஸ்.ஐ. பிடித்தங்களில் முறைகேடுகளை தடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள ரசீது வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசு ஏற்கும் மாவட்ட செயலர் ரங்கராஜ், தலைமை வகித்தார். மா.கம்யூ. மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''துாய்மைப் பணியாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கையை அரசு நிச்சயம் ஏற்கும்; சென்னையில், சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் சம்பளம் உயர்த்தி வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது,'' என்றார்.

மா.கம்யூ. மாவட்ட செயலர் மூர்த்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட, 450 பெண்கள் உட்பட, 900 பேர் கைது செய்யப்பட்டு ரோட்டரி அரங்கில் தங்க வைக்கப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us