/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோட்டீஸ் வழங்குவதா? போலீசுக்கு கண்டனம்
/
நோட்டீஸ் வழங்குவதா? போலீசுக்கு கண்டனம்
ADDED : டிச 07, 2025 07:14 AM

இடுவாய் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள், 12 பேருக்கு, மங்கலம் போலீசார் காரணம் கேட்கும் குறிப்பாணை (ேஷாகாஸ் நோட்டீஸ்) அனுப்பியுள்ளனர்.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
திருப்பூரில் சேகரமாகும் குப்பைகள் கொட்டுவதற்கு எதிரான போராட்டம் துவங்கியது முதலே, போலீசார் மக்கள் மீதான அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர். ஆரம்பம் முதலில், எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாமல், அறவழியில் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், ஆளும் கட்சிக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்குமான ஊழியர்களைப் போல் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.
எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நாங்கள் அமைதி வழி போராட்டம் நடத்த முயன்றும், அதிலும், போலீசார் தலையிட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். ஜனநாயகத்துக்கு விரோதமான போலீசாரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கிடையே, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மங்கலம் போலீசார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.

