sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நோட்டீஸ் வழங்குவதா? போலீசுக்கு கண்டனம்

/

 நோட்டீஸ் வழங்குவதா? போலீசுக்கு கண்டனம்

 நோட்டீஸ் வழங்குவதா? போலீசுக்கு கண்டனம்

 நோட்டீஸ் வழங்குவதா? போலீசுக்கு கண்டனம்


ADDED : டிச 07, 2025 07:14 AM

Google News

ADDED : டிச 07, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடுவாய் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள், 12 பேருக்கு, மங்கலம் போலீசார் காரணம் கேட்கும் குறிப்பாணை (ேஷாகாஸ் நோட்டீஸ்) அனுப்பியுள்ளனர்.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

திருப்பூரில் சேகரமாகும் குப்பைகள் கொட்டுவதற்கு எதிரான போராட்டம் துவங்கியது முதலே, போலீசார் மக்கள் மீதான அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர். ஆரம்பம் முதலில், எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாமல், அறவழியில் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், ஆளும் கட்சிக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்குமான ஊழியர்களைப் போல் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நாங்கள் அமைதி வழி போராட்டம் நடத்த முயன்றும், அதிலும், போலீசார் தலையிட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். ஜனநாயகத்துக்கு விரோதமான போலீசாரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கிடையே, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மங்கலம் போலீசார் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.






      Dinamalar
      Follow us