sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தங்க நகைக்கடன் வரைவு திட்டம் மாற்றியமைக்க கிசான் சங்கம் மனு

/

தங்க நகைக்கடன் வரைவு திட்டம் மாற்றியமைக்க கிசான் சங்கம் மனு

தங்க நகைக்கடன் வரைவு திட்டம் மாற்றியமைக்க கிசான் சங்கம் மனு

தங்க நகைக்கடன் வரைவு திட்டம் மாற்றியமைக்க கிசான் சங்கம் மனு


ADDED : மே 24, 2025 05:49 AM

Google News

ADDED : மே 24, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தங்க நகைக்கடன் குறித்த, சமீபத்திய வரைவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு, பாரதீய கிசான் சங்கம், மனு அனுப்பியுள்ளது.

பாரதீய கிசான் சங்கத்தின் தேசிய தென்னை அணி ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் அனுப்பியுள்ள மனு:

ஒரு விவசாயி அல்லது தனிநபர் தனது பண்ணை நடவடிக்கை, மருத்துவ தேவைக்காக எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொண்டால், தங்க நகையை அடமானம் வைப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.

இதுவரை எங்கள் கருத்துப்படி, தற்போதைய அமைப்பு சீராக செயல்பட்டு வருகிறது.மேலும் வங்கிகள் அடமான பிணையமாக கொடுக்கப்பட்ட தங்க நகையை ஏலம் விடுவதன் வாயிலாக கடன் ஈடுகட்டப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய வரைவுத் திட்டம் கிட்டத்தட்ட தங்க நகைக்கடனைப் பெறுவதை சாத்தியமற்றதாக்குகிறது.

பெரும்பாலான குடும்ப நகைகள், தலைமுறை தலைமுறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த பதிவுகளும் பராமரிக்கப்படவில்லை. எனவே, உரிமை சான்றிதழ் தயாரிப்பது சாத்தியமில்லை.

வங்கிகளில் தகுதி வாய்ந்த மதிப்பீட்டாளர்கள் பணியாற்றுகின்றனர். அனைத்து அளவுருக்களிலும் தங்கத்தின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து அவர் ஒப்புதல் வழங்குகிறார்.

எனவே விவசாயிகளிடம் சோதனைச் சான்றிதழைப் பெறச் சொல்வது எளிமையான துன்புறுத்தலாக அமையும். நம் நாட்டில் சோதனை உள்கட்டமைப்பு எதுவும் இல்லை.

இத்தகைய நடைமுறை சிக்கல்களால், ரிசர்வ் வங்கி புதிய வரைவை மறுபரிசீலனை செய்து, ஏற்கனவே உள்ள நடைமுறையைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us