/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : நவ 15, 2025 01:13 AM
திருப்பூர்: வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும், நாளையும், 32 சிறப்பு பஸ் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி மற்றும் சனி இரவு புறப்பட்டு, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சொந்த மாவட்டங்களுக்கு சென்று, திங்களுக்குள் திருப்பூர் திரும்பும் பல தொழிலாளர்கள், நம் மாவட்டத்தில் பணிபுரிகின்றனர்.
இவர்கள் வசதிக்காக ஒவ்வொரு வாரமும் திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வாராந்திர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவ்வகையில், இன்றும், நாளையும் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு, எட்டு பஸ்களும், கோவில்வழி, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 12 பஸ்கள் என மொத்தம், 32 பஸ்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'நடப்பு வாரம் விசேஷங்கள் இல்லை. நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமண முகூர்த்தம் என்பதால், கூட்டம் இருக்கும். பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பஸ் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

