/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வண்ண வாக்காளர் அட்டை வீடு தேடி வருகிறது
/
வண்ண வாக்காளர் அட்டை வீடு தேடி வருகிறது
ADDED : பிப் 10, 2025 07:34 AM
திருப்பூர், : சுருக்கமுறை திருத்தம் முடிந்து, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியானதையடுத்து, திருப்பூரில் உள்ள வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை தபா லில், வீடு தேடி வரத் துவங்கிவிட்டது.
நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான, சுருக்கமுறை திருத்தம், கடந்தாண்டு, அக்., 29ல் துவங்கி நவ., 28ம் தேதி வரை நடைபெற்றது.
வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டன. கடந்த ஜன., 6ம் தேதி, வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியானது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இறுதிப்பட்டியலில், 11 லட்சத்து 82 ஆயிரத்து 905 ஆண்கள்; 12 லட்சத்து 32 ஆயிரத்து 351 பெண்கள்; 352 திருநங்கைகள் என, மொத்தம் 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்; வரைவு பட்டியலைவிட, 32 ஆயிரத்து 788 வாக்காளர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
இளம் வாக்காளர்கள், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம், வேறு தொகுதிக்கு மாற்றம், வாக்காளர் அட்டையில் புகைப்படம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக விண்ணப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டோருக்கு, உரிய திருத்தங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டு வருகிறது.
மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், அருகாமை யில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம், ஸ்மார்ட் கார்டு வடிவிலான வண்ண அட்டை, வாக்காளர்களின்வீடு தேடி செல்கிறது. திருப்பூரில் நேற்று முன்தினம் முதல், தபால்காரர்கள், வாக்காளர் அடையாள அட்டை பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

