sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குடியிருப்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

/

 குடியிருப்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

 குடியிருப்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

 குடியிருப்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்


ADDED : டிச 02, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 02, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி வருவதோடு, பொதுமக்களை கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர்.

உடுமலை நகரிலுள்ள, 33 வார்டுகளிலும், தெரு நாய்கள் அபரிமிதமாக காணப்படுகிறது. அதிலும், குட்டைத்திடல், தளி ரோடு ரயில்வே மேம்பாலம், பாலாஜி நகர் சுற்றுப்பகுதிகளில், ஒவ்வொரு குழுவிலும், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன.

இவை, ரோட்டில் நடந்து செல்லும் குழந்தைகள், பொதுமக்களை விரட்டிச்சென்று கடிக்கின்றன. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி, விபத்துக்களை ஏற்படுத்துவதால், மக்கள் பாதிக்கின்றனர்.

அதே போல், நகரை ஒட்டியுள்ள பெரிய கோட்டை ஊராட்சி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவு தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us