/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்
/
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர் யார்? ஓட்டளிக்க தயாராகும் திருப்பூர் மக்கள்
ADDED : மார் 16, 2024 11:57 PM
திருப்பூர்:லோக்சபா தேர்தல் நடத்தப்படும் தேதி ஏப்., 19 என, அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், 'டாலர்' சிட்டியில் வசிக்கும் வாக்காளர்கள், தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வேட்பாளரை அடையாளம் காண தயாராக இருக்கின்றனர்.
ஆடைத் தொழிலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் தனி இடம் பிடித்துள்ள திருப்பூரில், விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையும் பிரதான தொழில்களாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தில், முக்கியப் பங்காற்றும் திருப்பூரில், தொழில்துறையின் வளர்ச்சி, நீடித்த நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது, தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களின் போது, பனியன் தொழிலில் சரிவு தென்பட்டாலும், மீண்டும் தொழிலை துாக்கி நிறுத்த, தொழில் துறையினர் காட்டும் முனைப்பு பாராட்டுக்குரியது. தங்களது இலக்கை நோக்கி தொழில் துறையை நகர்த்துவதில், அவர்கள் தளர்ந்து போவதில்லை.
அதேநேரம், 'ஆயத்த ஆடைத் தொழில் செழிப்புற இருக்கிறது' என்ற கருத்தை, தொழில் துறையை சேர்ந்த சில தரப்பினர் ஏற்க மறுக்கின்றனர். 'பஞ்சு, நுால் விலை; சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகளில் நிலவும் தடுமாற்றம் ஆகியவை சரி செய்யப்படவில்லை' என்பது, அவர்களின் ஆதங்கம். தென்னை விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள், இம்முறை தேர்தலில் சற்று பலமாகவே எதிரொலிக்கும் என, எதிர்பர்க்கப்படுகிறது.
தொழில் துறையினர் உட்பட அனைத்து தரப்பினரின் பிரச்னைகளுக்கும் லோக்சபாவில் குரல் கொடுத்து, அதற்கு தீர்வு ஏற்படுத்தி தரக்கூடிய மக்கள் பிரதிநிதி தேவை என்ற வாக்காளர்களின் எதிர்பார்ப்பை இம்முறை அதிகமாகவே உணர முடிகிறது.
ஊரக பகுதிகளான பல்லடம், அவிநாசி, தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் விவசாய, விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் நிரம்ப உள்ளன; தொழில்துறையினர் முன்வைத்துள்ள, மின் கட்டண உயர்வு பிரச்னைக்கு, இனியும் தீர்வு கிடைத்தபாடில்லை. இவ்வாறு, பல வளர்ச்சி தென்பட்டாலும், சில சரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை திட்டமிட்டு சரி செய்யக்கூடிய வேட்பாளருக்காக, திருப்பூர் மக்கள் காத்துள்ளனர்.

