sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

 ரூ.13 கோடி ஜி.எஸ்.டி., வரி நிலுவை; கிறுகிறுத்து போன பெண் தொழிலாளி

/

 ரூ.13 கோடி ஜி.எஸ்.டி., வரி நிலுவை; கிறுகிறுத்து போன பெண் தொழிலாளி

 ரூ.13 கோடி ஜி.எஸ்.டி., வரி நிலுவை; கிறுகிறுத்து போன பெண் தொழிலாளி

 ரூ.13 கோடி ஜி.எஸ்.டி., வரி நிலுவை; கிறுகிறுத்து போன பெண் தொழிலாளி


ADDED : டிச 07, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 07, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம்: தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்ணிற்கு, 13 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நாகாலை சேர்ந்தவர் மகாலிங்கம்; கார் ஓட்டுநர். இவரது மனைவி யசோதா. இவர் குடியாத்தம் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், மாதம், 8,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்.

சில நாட்களுக்கு முன், அவரது கணக்கில் சம்பள பணம் வரவு வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பணம் எடுப்பதற்காக, அவரது கணவர் மகாலிங்கத்துடன் ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். அப்போது, 'போதிய இருப்பு இல்லை' என, பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கியில் விளக்கம் கேட்டனர்.

அவர்கள் யசோதாவின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்து, அவர், 13 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி., வரி நிலுவை வைத்துள்ளதாக வணிக வரித்துறையில் இருந்து கடிதம் வந்துள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

எனவே, சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலகத்திற்கு செல்லுமாறு தம்பதியினரை வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பளத்தை எடுக்க முடியாமல் யசோதா தவித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us