ADDED : ஜூலை 03, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் அடுத்த காணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55; கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் மார்க்கமாக சென்றார்.
காணை அய்யனார் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன், 27; என்பவர் ஓட்டிவந்த பைக், ஆறுமுகம் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஆறுமுகம் இறந்தார்.
காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
