sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதை பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுரை

/

போதை பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுரை

போதை பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுரை

போதை பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் அறிவுரை


ADDED : ஜூலை 30, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், போதைப் பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள் ளார்.

விழுப்புரம் மாவட்டத் தில், கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பான கலால் ஆய்வுக் கூட் டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதியன்று பொலிரோ பிக்கப் வேனில் கடத்திய 258 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 2023ம் ஆண்டிலிருந்து, தற்போது வரை போதை பொருள் கடத்தல் குறித்து 11,579 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11,295 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2024-25ம் ஆண்டிற்கான, அரசின் மறுவாழ்வு நிதியுதவி 50 ஆயிரம் ரூபாய் வழங்கிட வசதியாக மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் எஸ்.பி., தீபக்சிவாச், கலால் உதவி ஆணையர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் ஹமீது உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us