ADDED : ஏப் 26, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கார் மோதியதில் ரோட்டில் நடந்து சென்றவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ராமதாஸ், 57; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, சிந்தாமணி அரசு பள்ளி எதிரே, தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நடந்து சென்றார். அப்போது, சேலத்தை சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ்,49; என்பவர் ஓட்டிவந்த கார், ராமதாஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார், கார் டிரைவர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

