UPDATED : ஜூன் 11, 2026 03:15 PM
ADDED : ஜூன் 11, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
: விழுப்புரம்: வயிற்று வலியால் இளம்பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த தொட்டி குடுமியான்குப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி வசந்தி, 38; இவர் நீண்டநாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடன், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே, வசந்தி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
