/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
ADDED : டிச 02, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாணிமேட்டைச் சேர்ந்த சுரேஷ், 26; என்பவர் தனது பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இதேபோன்று, விழுப்புரம் நகராட்சி திடல் எதிரில் அதிவேகமாக பைக் ஓட்டிய தோகைப்பாடியைச் சேர்ந்த ராம்குமார், 21; என்பவரை, தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் வழக்குப் பதிந்து கைது செய்தார்.

