/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கல்
/
ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கல்
ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கல்
ரூ.119.70 கோடியில் நலத்திட்ட உதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கல்
ADDED : டிச 07, 2025 05:23 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி வளாகத்தில், முதல்வரின் தாயுமானவர் திட்டம், சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிகண்ணன், சிவக்குமார், ரவிக்குமார் எம்.பி., எஸ்.பி., சரவணன், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பத்மஜா முன்னிலை வகித்தனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 647 பேருக்கு 10.31 கோடி ரூபாயிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 1,920 பேருக்கு 78.51 கோடி ரூபாய்.
தமிழக ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் 61 பேருக்கு 31.90 லட்சம் ரூபாய், தாட்கோ சார்பில் 172 பேருக்கு 3.85 கோடி ரூபாய், மாவட்ட தொழில் மையம் சார்பில் 38 பேருக்கு 11.49 கோடி ரூபாய்.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 70 பேருக்கு 4 லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 9,230 பயனாளிகளுக்கு 119.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்ட்டது.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உட்பட நகரமன்ற, பேரூராட்சி, ஒன்றிய சேர்மன்கள், துணைச் சேர்மன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் நன்றி கூறினார்.

