sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கட்சி கரை வேட்டியுடன் வராத நிர்வாகிகள் :மாவட்ட செயலாளர் அபராதம் விதிப்பு

/

 கட்சி கரை வேட்டியுடன் வராத நிர்வாகிகள் :மாவட்ட செயலாளர் அபராதம் விதிப்பு

 கட்சி கரை வேட்டியுடன் வராத நிர்வாகிகள் :மாவட்ட செயலாளர் அபராதம் விதிப்பு

 கட்சி கரை வேட்டியுடன் வராத நிர்வாகிகள் :மாவட்ட செயலாளர் அபராதம் விதிப்பு


ADDED : டிச 09, 2025 03:57 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாசார் பகுதியில் தே.மு.தி.க., மாநாடு வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, விழுப்புரத்தில் சமீபத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர், கட்சி வேட்டி, வெள்ளை சட்டை அணியாமல் பேண்ட் மற்றும் கலர் சட்டை அணிந்து வந்தனர்.

இதனைப் பார்த்து டென்ஷன் ஆன மாவட்ட செயலாளர், 'கட்சி கூட்டத்திற்கு வரும் போது கட்சி கரை வேட்டி, வெள்ளை சட்டையில்தான் வேண்டும். இதனை மீறிய நிர்வாகிகளுக்கு, அவரவர் பதவிக்கு ஏற்ப 100 முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.

அடுத்த கூட்டத்திலும் இது தொடர்ந்தால் அபராத தொகை கூடுதலாகும் என கண்டிப்போடு தெரிவித்தது மட்டுமல்லாமல் நிர்வாகிகளிடம் அபராத தொகையையும் கறாராக வசூலித்தார்.

அவ்வாறு வசூலான 6,700 ரூபாயை கட்சி தலைமை அலுவலக வங்கி கணக்கிற்கு அனுப்பி வரவு வைத்துள்ளார். மேலும், அந்த பணத்தை வரவு வைத்ததற்கான ஸ்கீரின் ஷாட்டை கட்சி நிர்வாகிகள் குரூப்பில் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us