ADDED : ஜூலை 08, 2026 02:36 AM
விழுப்புரம்: விழுப்புரத்திற்கு வந்த அமைச்சர் ஆனந்திற்கு, தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில், நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பங்கேற்றார்.
அப்போது விக்கிரவாண்டி பகுதிக்கு வந்த அமைச்சர் ஆனந்திற்கு, த.வெ.க., விழுப்புரம் தென்மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் திரளாக பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் வடிவேல், அமைச்சர் ஆனந்திற்கு பூங்கொத்து வழங்கி, பொன்னாடை அணிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
