ADDED : டிச 09, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் மகள் பிரேமலதா, 21; இவர், திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவிலுள்ள நகை கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் யுவராணி, 40; அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

