ADDED : நவ 14, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி, கூட்ரோட்டில் நகர காங்., சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நகர தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் லுார்து சேவியர் முன்னிலை வகித்தார். பள்ளி சிறுவர்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ராஜா, பொருளார் சேகர், பொதுச் செயலாளர் ஜான்பாஷா, மகிளா காங்., தனலட்சுமி, காசிஅம்மாள் முனியம்மாள், நிர்வாகிகள் ரங்கநாதன், குணசேகரன், துரை உட்பட பலர் பங்கேற்றனர்.

