sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.1.60 கோடி ஹவாலா பணம்; விழுப்புரத்தில் 4 பேர் சிக்கினர்

/

ரூ.1.60 கோடி ஹவாலா பணம்; விழுப்புரத்தில் 4 பேர் சிக்கினர்

ரூ.1.60 கோடி ஹவாலா பணம்; விழுப்புரத்தில் 4 பேர் சிக்கினர்

ரூ.1.60 கோடி ஹவாலா பணம்; விழுப்புரத்தில் 4 பேர் சிக்கினர்


ADDED : ஜன 31, 2025 08:02 AM

Google News

ADDED : ஜன 31, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன் வந்த 4 பேரை போலீசார் பிடித்து, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசார் முருகவேல், சுதாகர் ஆகியோர் நேற்று காலை 11:00 மணிக்கு பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, கையில் பேக்குடன் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரை நிறுத்தி, அவர்களின் பேக்கை சோதனை செய்தனர். நான்கு பேக்குகளில் தலா ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1.60 கோடி இருந்தது.

உடன் 4 பேரையும், விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர்கள், திருச்சி, வரகனேரியைச் சேர்ந்த முபாரக் மகன் ராஜ்முகமது,35; ஜாகிர் உசேன் மகன் முகமது ரியாஸ்,30; ராவுத்தர் மகன் சிராஜூதீன்,31; ஜாபர் அலி மகன் அபுபக்கர் சித்திக்,31; என்பதும், திருச்சி காந்தி மார்கெட்டில் கூலி வேலை செய்து வரும் இவர்கள், நேற்று காலை 7.20 மணிக்கு சென்னை பிராட்வேயில் பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த 4 பேர் கொடுத்த பேக்குகளை வாங்கிக் கொண்டு, எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏறி விழுப்புரம் வந்துள்ளனர். இங்கிருந்து, திருச்சிக்கு பஸ்சில் செல்வதற்காக, விழுப்புரம் பஸ் நிலையம் வந்தபோது போலீசில் பிடிபட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஹவாலா கும்பலிடம், யாரிடம் பணத்தை பெறுகிறோம், யாரிடம் பணத்தை சேர்க்கிறோம் என தெரியாமல் 'குருவியாக செயல்பட்டு வருவதும், இதுவரை 4 முறை, பணத்தை மாற்றி சேர்த்ததும் தெரிய வந்தது.

அதனையொட்டி போலீசார், சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை விழுப்புரத்திற்கு வரவழைத்து, பிடிபட்ட 4 பேரையும், அவர்கள் கொண்டு வந்த ரூ.1.60 கோடி ஹவாலா பணம் மற்றும் 4 பேரின் மொபைல் போன்களையும் ஒப்படைத்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள், பிடிபட்ட 4 பேர் பணத்தை யாருக்கு கொண்டு சென்றனர். இவர்களை இந்த பணியில் ஈடுபடுத்தியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.1.60 கோடி சிக்கியதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us