/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழகத்தை பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., விற்று விடும் விக்கிரவாண்டியில் உதயநிதி கிண்டல்
/
தமிழகத்தை பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., விற்று விடும் விக்கிரவாண்டியில் உதயநிதி கிண்டல்
தமிழகத்தை பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., விற்று விடும் விக்கிரவாண்டியில் உதயநிதி கிண்டல்
தமிழகத்தை பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., விற்று விடும் விக்கிரவாண்டியில் உதயநிதி கிண்டல்
ADDED : டிச 07, 2025 06:45 AM

விக்கிரவாண்டி: 'வரும் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பளித்தால் தமிழ்நாட்டை பா.ஜ.,விடம் விற்று விடுவார்கள்' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்து வருகிறார். ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறார். விடுபட்ட மகளிருக்கு வரும் 12ம் தேதியில் இருந்து வழங்கப்படும்.
இதுபோன்று பல்வேறு திட்டங்களை வழங்கி இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக, நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார். அதனால், வரும் தேர்தலிலும் மக்கள் வெற்றி வாய்ப்பைத் தருவதற்கு தயாராக இருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.,வை பா,ஜ., விற்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். வரும் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.,விற்கு வாய்ப்பு அளித்தால், தமிழ்நாட்டையே பா.ஜ.,விடம் விற்று விடுவார்கள்.
பா.ஜ.,வின் அடிமையாக அ.தி.மு.க., செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜ., எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கு 'ஆமாம்' போடுவதிலேயே குறியாக உள்ளார்கள்.
குறிப்பாக அ.தி.மு.க., 'அமித்ஷா திராவிட முன்னேற்றக் க ழகமாக' மாறி இருக்கிறது என்றால் அந்த அளவிற்கு அமித்ஷாவின் அடிமைகளாக அ.தி.மு.க.,வினர் மாறிவிட்டனர். இதற்கு எல்லாம் சரியான பதில் கிடைக்கின்ற நேரம்தான் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்த லாகும்.
அடுத்த 3 மாதங்களில் நமது அரசினுடைய சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று அவர்களுக்கு ஞாபகப்படுத்தி பிரசாரத்தை செய்ய வேண்டும் என்பதை கருணாநிதி சிலை முன் நாம் உறுதிமொழி ஏற்போம்.
மீண்டும் திராவிட மாடல் அரசு நமது முதல்வரை மீண்டும் முதல்வராக அமர்த்திடுவோம்.
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

